நடிகர் கமலுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்களை கைது செய்ய வேண்டும் ; கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் கருத்து….

நடிகர் கமல்ஹாசனுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்களை கைது செய்ய வேண்டும் என்று கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் தெரிவித்துள்ளார்.
அரசியலுக்கு வரப்போவதாக கூறி வரும் நடிகர் கமல்ஹாசன், பத்திரிக்கை ஒன்றில் இந்து தீவிரவாதம் என்று குறிப்பிட்டிருந்தார். இதற்கு பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தன. மேலும் உத்தரபிரதேசத்தில் கமல்ஹாசன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே இந்து மதம் குறித்து அவதூறு பரப்பும் கமல்ஹாசன் உள்ளிட்டோரை கொலை செய்ய வேண்டும் என்று இந்து மகாசபை ஒன்று கூறியது. இத்தகைய கொலை மிரட்டலுக்கு கேரள முதல்வர் பினராய் விஜயன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அவர், இது பேச்சுரிமைக்கு எதிரான செயல் என்று சாடியுள்ளார். மேலும் நடிகர் கமல்ஹாசனுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்களை உடனடியாக கைது செய்யவேண்டும் என்றும் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *