வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவாரூர் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தீவிரமடைந்துள்ளது. தலைநகர் சென்னையில் மூன்று நாளாக பெய்து வரும் கனமழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. முக்கிய இடங்களில் போக்குவரத்து நெருக்கடி, மின் இணைப்பு துண்டிப்பு என பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் நிலையில் கடந்த நான்கு தினங்களாக சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுப்பு அறிவிக்கப்பட்டிருந்தது, இந்நிலையில், இன்றும் மழை தொடர்ந்து பெய்து வருவதால் ஐந்தாவது நாளாக நாளையும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். அதன்படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவாரூர் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பிற பகுதிகளிலும் மழை பாதிப்புக்கு ஏற்ப பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் அறிவிப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

