தேனியில் நியூட்ரினோ ஆய்வு மையம்.. தமிழக மக்களின் தலையில் பேரிடி – திருமா. கண்டனம்

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தேனி மாவட்டம் தேவாரம் அருகே நியூட்ரினோ ஆய்வுத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பொட்டிபுரத்தில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளானோர் பங்கேற்றனர். நியூட்ரினோ திட்டத்தால் சுற்றுச்சூழல், நிலத்தடி நீர் மட்டம் பாதிப்படையும் என்றும் எனவே திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும் என திருமாவளவன் கேட்டுக்கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *