ஜம்மு காஷ்மீர் உரி பகுதியில் ஊடுருவ முயன்ற இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக்கொலை…; இந்திய ராணுவ வீரர்கள் அதிரடி தாக்குதல்….

ஜம்மு காஷ்மீர் மாநிலம் உரி பகுதியில் ஊடுருவ முயன்ற இரண்டு தீவிரவாதிகளை ராணுவ வீரர்கள் சுட்டுக் கொன்றனர்.
பாரமுல்லா மாவட்டம் உரி பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவ முயன்றுள்ளனர். அப்போது ராணுவ வீரர்கள் நடத்திய தாக்குதலில் தீவிரவாதிகள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் தீவிரவாதிகள் பலர் பதுங்கி இருக்கக் கூடும் என்பதால் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருவதாக ராணுவ வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *