கடலூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

இதனிடையே கஜா புயல் நாளை மாலை கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் கடலூர் மாவட்டத்தில் நாளை அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் மற்றும் காவல் கண்காணிப்பாளருடன், பேரிடர் கண்காணிப்பு அதிகாரியான ககன் தீப் சிங் பேடி ஆலோசனை மேற்கொண்டார். ஆலோசனைக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விவசாயிகள் பயிர் காப்பீடு பெற, காப்பீட்டு பிரீமியத்தை செலுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் தேங்கும் நீரை, மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி இல்லாமல், திறக்கக் கூடாது என்று அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *