ஒடிசாவில் மின்வேலியில் சிக்கி 7 காட்டுயானைகள் உயிரிழப்பு

ஒடிசாவில் மின்வேலியில் சிக்கி 7 காட்டு யானைகள் பரிதாபமாக உயிரிழந்தன. தென்கனல் மாவட்டத்தில் உள்ள கமலங்கா கிராமத்தில், வனப்பகுதியை ஒட்டிய விவசாய நிலத்தில் மின்வேலிப் போடப்பட்டுள்ளது.

இந்நிலையில், தண்ணீர் குடிப்பதற்காக வந்த காட்டுயானைக் கூட்டம் ஒன்று மின்வேலியில் சிக்கியதாக கூறப்படுகிறது. இதில் 7 யானைகள் மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தன. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறை அதிகாரிகள், யானைகளின் உடல்களை மீட்டு, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *