ஜம்மு காஷ்மீரில் மினி பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்த கோர விபத்தில் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பணிஹாலில் இருந்து ரம்பன் என்ற இடத்துக்கு மினி பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது, ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில், கேல மோத் என்ற பகுதியை அடைந்தபோது, பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்து 100 அடி பள்ளத்தாக்கில் பாய்ந்தது.
இந்த விபத்தில், 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 19 பேர் காயமடைந்தனர். ஆபத்தான நிலையில் உள்ள 8 பேர் ஜம்முவில் உள்ள மருத்துவமனைக்கு விமானம் மூலம் மேல்சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

