சூடான் விமான நிலையத்தில் ராணுவ விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்ட காட்சிகள் வெளியாகியுள்ளன.
கர்டௌம் விமான நிலையத்தில், அந்நாட்டு நேரப்படி நேற்று மாலை வந்திறங்கிய இரண்டு ராணுவ விமானங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதிக் கொண்டன.
விபத்தில் இரு விமானங்களிலும் பயணித்த 8 பேர் காயமடைந்தனர். விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. அங்கு வந்திறங்க வேண்டிய விமானங்கள் வேறு நிலையங்களுக்குத் திருப்பப்பட்டுள்ளன. விமானங்கள் இரண்டும் அதிகளவு சேதமடைந்துள்ளது.

