மதவாத அரசியல் தமிழகத்தில் ஒரு போதும் காலூன்ற முடியாது, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திட்டவட்டம்

தமிழகத்தில் மதவாத அரசியல் ஒரு போதும் காலூன்ற முடியாது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், காவிரி நீரை பெற அனைத்து விவசாயிகள் சங்கங்கள் எடுக்கும் நடவடிக்கைகளிலும் ம.தி.மு.க முழுமையாக பங்கேற்கும் என்று தெரிவித்தார். கவிஞர் வைரமுத்து தமிழகத்தின் சொத்து என்று கூறிய அவர், தமிழகத்தில் மதவாத அரசியல் ஒரு போதும் காலூன்ற முடியாது என்றும் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *