சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் ஸ்மார்ட் சிட்டி மற்றும் அம்ரூத் திட்டங்கள் தொடர்பாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ஈரோடு, திண்டுக்கல் மாநகராட்சிகளை ஸ்மார்ட்சிட்டிக்கான 4-ம் கட்ட தேர்வுக்காக மத்திய அரசிடம் கருத்துருக்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். அம்ரூத் திட்டம் என்ற அடல் நகர்ப்புற புத்துணர்வு மற்றும் மாற்றத்துக்கான திட்டத்தை நிறைவேற்றுவதில் தமிழகம் நாட்டிலேயே 2-ம் இடத்தில் உள்ளதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.
2018-01-09

