மத்திய தென்கிழக்கு வங்கக்கடலுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்: இந்திய வானிலை மையம் எச்சரிக்கை

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதனால் வடக்கு அந்தமான் கடற்கரை பகுதிகளில் தீவிர காற்றழுத்த பகுதி நிலவுகிறது. இது அடுத்த 12 மணி நேரத்தில் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என கூறப்பட்டுள்ளது. மேலும் அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து புயலாக மாறும். இதனால் அந்தமான், மத்திய தென்கிழக்கு வங்கக்கடலுக்கு நவம்பர் 13ம் தேதி வரை மீனவர்கள் செல்ல வேண்டாம் என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *