திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுகிறார் என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறியுள்ளார்.
கரூரை அடுத்த புலியூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பொதுமக்களை சந்தித்து மனுக்களைப் பெற்றபின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக தலைவர் ஸ்டாலின் ஆரம்பத்தில் தமிழக அரசு சிறப்பாக செயல்படுகிறது என்று கூறிவிட்டு, தற்போது பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளை பார்வையிட செல்லும்போது தனது கட்சிக்காரர்களை போராட தூண்டி விட்டுள்ளார் என்றார்.

