நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் உயர் அதிகாரி பணம் கேட்டு தொந்தரவு செய்ததால் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற அங்கன்வாடி ஊழியர் சுமதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கல்லிடைக்குறிச்சியைச் சேர்ந்த சுமதி விதவைகளுக்கான இட ஒதுக்கீட்டில் அங்கன்வாடி பணியாளர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டு வாகைக்குளம் அங்கன்வாடியில் பணியமர்த்தப்பட்டார். பணிநியமனம் செய்யப்பட்ட பிறகும் குழந்தைகள் நல வளர்ச்சித் திட்ட அலுவலரான சாந்தி என்பவர், சுமதியிடம் பணி நியமனத்திற்கு பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். இதனால் மனமுடைந்த சுமதி கடந்த 16ஆம் தேதி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். இச்சம்பவம் தொடர்பாக அலுவலர் சாந்தி பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், சுமதி பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் புதன்கிழமை நண்பகலில் சுமதி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

