18 எம்.எல்.ஏக்கள் வழக்கில் மேல்முறையீடு செய்கிறேன் என்று சொன்னால்தான் அமமுகவில் 4 பேராவது இருப்பார்கள் என்பதற்காகவே தினகரன் அவ்வாறு கூறியிருப்பதாக அமைச்சர் ஓ.எஸ். மணியன் தெரிவித்துள்ளார்.
கோவையில் நடைபெற்ற ‘பன்னாட்டு ஜவுளிக் கண்காட்சி முன்னோட்ட விழா’வில் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, ஓ. எஸ். மணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.எஸ். மணியன், தினகரனின் கட்சி விரைவில் கானல் நீராகி காணாமல் போகும் என்றார்.

