தமிழகத்தின் கடலோர பகுதிகளில் வரும் 9ம் தேதி மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலையே நிலவும் என்றும் வரும் 9ம் தேதி கடலோர தமிழகத்தில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொருத்த வரை வானம் தெளிவாக காணப்படும் என்றும், அதிகாலை நேரத்தில் பனிப்பொழிவு இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதனிடையே உதகையில் அதிகமாக மூடு பனி நிலவும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *