சாதி மீறி திருமணம் செய்த பெண்ணை மரத்தில் கட்டிப்போட்டு அடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பீகார் மாநிலம் நவாடா மாவட்டத்தில் வேறு சாதியைச் சேர்ந்தவரை திருமணம் செய்த பெண்ணை கிராம பஞ்சாயத்து கொடுத்த உத்தரவின் பேரில் 5 மணிநேரம் மரத்தில் கட்டி வைத்து அடித்துள்ளனர். பெண்ணின் பெற்றோர்களும் ஊர் பஞ்சாயத்து கொடுத்த தீர்ப்பை ஆதாரித்து மகள் அடி வாங்கும் காட்சியை ஊர் மக்களுடன் இணைந்து பெற்றோர்களும் பார்க்கும் காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜூலி கிராமத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் செப்டம்பர் 30 அன்று ஊரை விட்டு ஓடிப்போய், வேறு சாதியைச் சேர்ந்த ஆண் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். பின் இருவரும் பக்கத்தில் இருந்த வேறொரு கிராமத்தில் வசித்து வந்தனர். இவர்கள் இருக்கும் இடத்தைத் தேடி வந்த ஊர் பஞ்சாயத்துகாரர்கள், அந்தப் பெண்ணை அடித்து இழுத்துச் சென்றனர். செய்தியாளர்களிடம் பேசிய பெண்ணின் தந்தை, தன்னுடைய விருப்பத்தை மீறி சாதி மாறி மகள் செய்து கொண்ட திருமணத்தை தான் விரும்பவில்லை என்று கூறினார். மேலும், ஊர் பஞ்சாயத்து கொடுத்த தண்டனை சரிதான் என்று அதை ஆதரிக்கவும் செய்தார்.

